ரஸ்மின் MISc (துணை செயலாளர் SLTJ) பள்ளிக்கான போராட்டத்தை SLTJ வாபஸ் பெருகின்றது. கொழும்பு, கிரேன்பாஸ், பள்ளிவாயல் தாக்கப்பட்டது தொடர்பாக தாக்கப்பட்டு சில நேரங்களிலேயே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் குறித்த பள்ளிவாயல் அமைந்துள்ள இடத்தை அடைந்தார்கள். நேற்று இரவு முழுவதும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி இரவோடு இரவாக காவிக் காடையர்கள் வெளியேறும் வரை வெளியேறமாட்டோம் என்று அடம்பிடித்து காவிக் காடையர்களை வெளியேற்றிய பின் இரவு 03 மணிக்கு ஜமாத் நிர்வாகிகள் பள்ளிவாயல் இடத்தைவிட்டும் […]
Daily Archives: 11/08/2013
ஒரு நாளைக்கு 3 மணித்தியாலங்கள் பார்க்கும் சிறிய பிள்ளைகள் பெரும்பாலும் கல்வி கற்கையில் திண்டாட நேரிடும் : ஆய்வு!
ஆக 11
அண்மையில் University of Montreal, Quebec கில் நடத்தப்பட்ட ஆய்வின் படி சிறிய பிள்ளைகள் தொலைக்காட்சிக்கு முன் செலவிடும் நேரத்தின் அளவிற்கும் இளவயதில் அவர்களுடைய கல்வி கற்கும் ஆற்றலுக்கும் பிற்காலத்தில் மற்றவர்களால், பலவீனப்படுத்தப்படும் போது பாரிய துன்பத்தை உண்டாக்குதல் போன்றனவற்றிற்கும் சம்பந்தம் இருப்பதாக கூறப்படுகின்றது. ஒரு நாளைக்கு 3 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்க்கும் சிறிய பிள்ளைகளின் சொல்வளம், கணித அறிவு போன்றன குறைவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்படலாமெனவும் ஆராய்ச்சி பரிந்துரைக்கின்றது 2 வயது பிள்ளை 2 மணித்தியாலங்களுக்கு மேல் […]
பிரபாகரனை பிடித்த அரசுக்கு பள்ளிகள் மீது தாக்குதல் மேற்கொள்வோரை ஏன் பிடிக்க முடியாது : முஜிபுர்!
ஆக 11
பிரபாகரனை பிடிக்க முடியுமானால் ஏன் அரசாங்கத்திற்கு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்பவர்களை பிடிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கிராண்ட்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீதான தாக்குதலானது முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான திட்டமே. தேசிய கீதத்தில் ஒற்றுமையைப் பற்றி பாடுவோர் யதார்த்தத்தில் இனவாதத்தை தூண்டுகின்றனர். முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற்றவே அரசாங்கம் எத்தனிக்கின்றது. முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புவதன் காரணத்தினால் தான் வன்முறையை கையாளாது அமைதியாக உள்ளனர். […]
சுத்தமான தண்ணீர் எங்கே? அமெரிக்காவில் நடந்த வித்தியாசமான மரதன் போட்டி!
ஆக 11
அமெரிக்காவில் மிக வித்தியாசமான முறையில் மரதன் போட்டி நடைபெற்றுள்ளது. அல்ட்ரா மரதன் என்றழைக்கப்படும் இப்போட்டி, கடந்த 36 ஆண்டுகளாக வருடந்தோறும் ஜீலையில் நடத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது தான். மேலும் உலகின் வெப்பநிலை சராசரியாக 120 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வரும் வேளையில், கடல் நீர் மட்டம் உயர்வது மற்றும் மற்ற நீர்நிலைகள் மோசமடைந்து வருவது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த மரதனின் உயரிய நோக்கம். இப்போட்டியின் பயண […]
காடையர்களின் அடாவடித்தனங்களுக்கு உத்தியோக பூர்வமான அங்கீகாரமாக அரசின் மத்தியஸ்தங்கள் அமைந்து விடக் கூடாது!
ஆக 11
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் முஸ்லிம்களின் வழிபாடுகள் அல்லது மஸ்ஜிதுகள், அல்லது வேறு ஏதேனும் விவகாரங்கள் பௌத்தர்களையோ அல்லது வேறு மதத் தவர்களையோ பதிப்பதாயின் காடையர்கள் சட்டத்தை கையிலேடுப்பதனை ஒரு பொழுதும் அங்கீகரிக்க முடியாது, மாறாக உரிய முறையில் சட்டம் நீதி ஒழுங்கை நிலை நிறுத்துகின்ற பொறுப்பு ஜனாதிபதி மற்றும் அரசையே சாரும்.! முஸ்லிம் சிவில் சன்மார்க்க அரசியல் தலைமைகள் விடயங்களை நன்றாக ஆராய்ந்த பின்னரே ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பார்கள் என அதிருப்தியோடேனும் நாம் நம்ப வேண்டி இருந்தாலும் ஒரு […]
12வயது சிறுவன் 5.16 கரட் வைரம் கண்டு பிடிப்பு!
ஆக 11
USA வடகரோலினாவைச் சேர்ந்த 12 வயது Michael Dettlaff என்ற சிறுவன் தன் குடும்பத்தாருடன் விடுமுறையில் Arkansa வின் பாரிய வைரங்கள் நிறைந்த பகுதி பார்க்கிற்கு சென்றுள்ளான். ஆங்கு அவன் தேன் பிறவுன் வைரத்தைக் கண்டு பிடித்துள்ளான். பார்க்கின் கொள்கைப்படி கண்டுபிடிப்பவர்களுக்கே வைரம் சொந்தமாகும். வைரத்தைக் கண்டுபிடித்த சிறுவன் அதற்கு God’s Glory Diamond என்று பெயரிட்டுள்ளான். அவ்வைரம் ஒரு ஜெலி பீன் அளவுடையதென்றும் இவ்வருடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 328 வது வைரமெனவும் கூறப்படுகின்றது. Arkansas வைரப் பகுதி 1972 ல் மாநில […]
சார்ஜாவில் 20 மில்லியன் தங்கம் கொள்ளை: இரு இந்தியர்கள் உட்பட மூவர் கைது!
ஆக 11
சார்ஜாவில் கடந்த சில நாட்களாக புலனாய்வு செய்யப்பட்டு வந்த 20 கிலோ தங்கம் மற்றும் தங்க நகை கொள்ளை தொடர்பாக துப்புத் துலங்கியது என்று கூறியுள்ளது போலீஸ். அதையடுத்து 3 ஆசிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட தங்கத்தின் மதிப்பு, Dh20 மில்லியன்! கடந்த சில தினங்களாக துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருந்த சார்ஜா போலீஸ், கொள்ளையடித்தவர்களை அடையாளம் கண்டுகொண்டது. ஆனால், அவர்களது இருப்பிடத்தை அறிய முடியவில்லை. கடந்த இரு தினங்களாக, அவர்களது இருப்பிடத்தை அறியும் முயற்சிகள் முடுக்கி […]
அமெரிக்க பெண்ணை நாடு கடத்தியது பஹ்ரெயின்!
ஆக 11
பஹ்ரெயினில் இருந்து அமெரிக்க பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்டவர் ஒரு பெண், அவர் பஹ்ரெயினில் கான்ட்ராக்ட் அடிப்படையில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தார் என்பதை தவிர, நாடு கடத்தப்பட்டவர் பற்றிய வேறு அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆசிரியையாக இருந்துகொண்டு இவர் பஹ்ரெயின் பற்றிய சில கட்டுரைகளை எழுதியதாகவும், அவற்றில் பஹ்ரெயின் அரசு பற்றியும், அரச குடும்பம் பற்றியும் தவறான தகவல்கள் பல இருந்ததாகவும், இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவரது விசா, […]
பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது குறித்து இதுவரை உரிய நடவடிக்கை இல்லை : ஹக்கீம் கவலை!
ஆக 11
பள்ளிவாசல்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இத்தகவலை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடகச் செயலாளர் டொக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் தெரிவித்தார். இது குறித்து ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் மேலும் கூறுகையில், கிரான்ட்பாஸ் சம்பவம் இடம்பெற்ற போது ஹக்கீம் கண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார். சம்பவத்தை கேள்வியுற்றபின் கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைத்து நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். பின்னர் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுடன் […]
கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு தோல்வி!
ஆக 11
This gallery contains 1 photo.
-jfm பௌத்தசாசன அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை, 11 ஆம் திகதி அமைச்சர்கள் பௌஸி, தினேஸ் குணவர்த்தனா ஆகியோரின் இணைத்தலைமையில் கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. அமைச்சர் பௌஸி, இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். கிரண்ட்பாஸ் புதிய பள்ளிவாசலிலேயே முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகையில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதற்கு அங்கிருந்த பௌத்த இனவாத அமைச்சர்கள் (சம்பிக் ரணவக்க) பௌத்த தேரர்கள், சிங்கள பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதன்போது புதிய பள்ளிவாசலை […]
வாழைப்பழம் சாப்பிட்டால் எடை குறையுமா?
ஆக 11
வாழைப்பழம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஏற்றது என்பது பொதுவான கருத்தாகும். அதுமட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் இது சரி என நிரூபணமாகி இருக்கிறது. காரணம் இந்த வாழைப்பழத்தில் கார்போஹைடிரேட், விட்டமின், கால்சியம், தாதுசத்துக்கள் அடங்கி இருப்பதுடன் எளிதாக ஜீரணம், கொழுப்பை குறைக்கும் சக்தி அமைந்திருக்கிறது. எனவே வாழைப்பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க வல்லது என உடற்பயிற்சி வல்லுனர்கள் பலர் கூறுகிறார்கள். இதனாலேயே விளையாட்டு வீரர்கள் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். எது எப்படியோ காலை உணவுடன் அல்லது […]
கிரண்பாஸ் பழைய பள்ளிவாசலுக்கு காத்திருக்கும் ஆபத்து!
ஆக 11
பௌத்தசாசன அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பழைய பள்ளிவாசலிலேயே முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் பழைய பள்ளிவாசலில் தொழுவதில் முஸ்லிம்களுக்கு சில ஆபத்துக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது இப்பழைய பள்ளிவாசல் இதுவரை பௌத்தசாசன அமைச்சில் பதிவு செய்யப்படவில்லையென அறியவருகுறிது. எதிர்காலத்தில் இதனை காரணம் காட்டி சிக்கல்கள் தோன்றலாம். ஏற்கனவே பழைய பள்ளிவாசலுக்கு அருகில் அரச மரம் உள்ளதையும் காரணம் காட்டித்தான் அந்த பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டுமென பௌத்தசிங்கள இனவாதிகள் வலியுறுத்தவே அருகில் புதிய […]
பள்ளிவாசல் தாக்குதல் காண்காணிப்பு கமராக்களில் பதிவு (வீடியோ)!
ஆக 11
கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசல் மீது நேற்று மாலை பௌத்தசிங்கள காடையர் கும்பலொன்றால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன. அவற்றை இங்கு காணலாம். http://www.youtube.com/watch?v=86sz8oBZBE0 http://www.youtube.com/watch?v=ZnxYjr-RyNE
பழைய பள்ளிவாசலிலேயே இனிமேல் தொழுகை – புதிய பள்ளிவாசலை கைவிட வேண்டும்!
ஆக 11
This gallery contains 1 photo.
கிரண்பாஸ் பகுதியில் அமைந்திருந்த பழைய பள்ளிவாசலிலேயே இனிமேல் தொழுகையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று 11-08-2013 பிந்நேரம் பௌத்தசாசன அமைச்சில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பழைய பள்ளிவாசலில் அருகிலுள்ள அரச மரத்தை கொழும்பு மாநகர சபை மூலமாக வெட்டுவதற்கும், முன்னர் அப்பகுதியூடாக முன்னெடுக்கவிருந்த வாய்க்கால் திட்டத்தை கைவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை காலை 6 மணியிலிருந்து வழமை போன்று பழைய பள்ளிவாசலில் தொழுகைகள் நடைபெறுமெனவும் தீர்மானிக்கப்ட்டுள்ளது.
‘பள்ளிவாசல் தாக்குதல் ஆபத்தானது, எதிர்காலத்தில் வன்முறையை தூண்டிவிட உந்துதல் அளிக்கும்’!
ஆக 11
This gallery contains 1 photo.
கொழும்பு – கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. முஸ்லிம்கள் தொழுகையில் இருந்தபோது இனவாதக் குழுவால் அச்சமின்றி அப்பட்டமாக கிரான்ட்பாஸ் பள்ளி மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் இன்று (11) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களை பாராபட்சம் அல்லது ஆதரவு காட்டாது கைது செய்து சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும்படி பொலிஸாருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உடனடியாக உத்தரவிடும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அறிக்கையில் […]