இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுப் பயணங்களை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் பல மில்லியன் டொலர் செலவில் விளம்;பரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பபுவா நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் அல்லது நாடு கடத்தப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் பல மில்லியன் டொலர்கள் செலவிட்டு விளம்பரம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரையில் 2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை படகு மூலம் சென்றடைந்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு படகு […]
Daily Archives: 02/08/2013
கனடாவில் புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு!
ஆக 2
கனடாவில் புதிதாக நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட கனடாவின் Again நதியிலிருந்தே இந்த புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 மீற்றர் நீளம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியை, Adam Shoalts என்பவர் சுற்றுலா பயணத்தின் போது கண்டுபிடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படதாக இந்த நீர்வீழ்ச்சியை, சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்து கனடிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதான் கடந்த 100 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும்.
ஆஸியின் புதிய நடவடிக்கை படகு பயணிகளுக்கு சிறந்த படிப்பிணை – டோனி பேர்க்!
ஆக 2
அவுஸ்திரேலியப் புதிய பிராந்திய அமர்வுத் திட்டத்திற்கமைய, தஞ்சம் கோரும் 40 பேரைக் கொண்ட முதலாவது குழுவை, பப்புவா நியூ கினித் தீவுக்கு மாற்றியதாக, அவுஸ்திரேலியக் குடிவரவு குடியுரிமை அமைச்சர் டோனி பேர்க் கூறினார். ´மனஸ் தீவுக்கு அனுப்பப்பட்ட இந்த முதலாவது மாற்றமானது, அவுஸ்திரேலியாவுக்கு படகில் வருவதானது, அவுஸ்திரேலியாவில் வதிவுடமை பெறுவதற்குச் சரியான வழியல்ல என்கின்ற செய்தியைக் கொடுக்கும் என்று திரு. பேர்க் கூறினார். பப்புவா நியூ கினியுடன் கையெழுத்திட்ட புதிய ஒழுங்கின்படி, அனுமதியற்ற வருகைகள், பப்புவா நியூ […]
அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் உரிமைக்கு மதிப்பளிக்கவும் – அமெரிக்கா!
ஆக 2
வெலிவேரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று (02) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்குள்ள உரிமைக்கு மதிப்பளிக்குமாறு அமெரிக்க இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், அனைத்து பக்கங்களிலும் இருந்தும் கட்டுப்பாடுகளை பேணுமாறு அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது – தயான் ஜயதிலக்க!
ஆக 2
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என சிரேஸ்ட ராஜதந்திரியும், பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவமானதுடன் ரத்து செய்யக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். விஜித யாபா பிரசூரகத்தின் நூல் வெளியீடான ‘நீண்ட யுத்தமும், குளிர்ந்த சமாததானமும்’ என்ற நூலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தமி;ழ் சிங்கள இன சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 13ம் திருத்தச் சட்டம் ஓர் அடித்தளமாக […]
மனித சிறுநீரில் இருந்து செயற்கை பல் தயாரிப்பு!
ஆக 2
This gallery contains 1 photo.
மனித சிறுநீரில் இருந்து பற்களை உருவாக்கி சீன ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் குவாங்சுவோ பயோமெடிசின் மற்றும் ஹெல்த் டீத் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை பற்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக மனித சிறுநீரில் இருந்து வெளியேறும் செல்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. அந்த செல்கள் ரீஜெனரேஷன் முறையில் ஸ்டெம் செல்களாக மாற்றம் செய்யப்பட்டன. பின்னர் ஸ்டெம் செல்களுடன் எலிகளின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து செயற்கை […]
கனடா நாட்டு தூதுவருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு!
ஆக 2
This gallery contains 1 photo.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலே விட்டிங், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (02) முற்பகல் அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. இருதரப்பு உறவுகள் பற்றியும், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றியும் இக் கலந்துரையாடலின் போது கருத்துப்பரிமாற்றப்பட்டுள்ளது.
ஸ்னோடென்னுக்கு தஞ்சம் அளித்தது ரஷ்யா : ரகசிய இடத்தில் ஓராண்டு தங்குவதற்கு அனுமதி!
ஆக 2
அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்டு ஸ்னோடென்னுக்கு, ரஷ்யா தஞ்சம் அளித்துள்ளது. இதையடுத்து அவர், மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து வெளியேறினார். அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென். சமீபத்தில், அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்தினார். இதனால், ஸ்னோடென் மீது, உளவு பார்த்தல், அரசு ஆவணங்களை திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை, அமெரிக்கா, சுமத்தி உள்ளது. இதனால், அமெரிக்காவிலிருந்து தலைமறைவான ஸ்னோடென், ஹாங்காங்கில் தங்கியிருந்தார். அவரை, தன்னிடம் ஒப்படைக்கும்படி, அமெரிக்கா வற்புறுத்தியது. இதையடுத்து, […]
கார்– சைக்கிளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்!
ஆக 2
கார் மற்றும் சைக்கிளுடன் கூடிய புதிய மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது பெடல் மூலம் மிதித்து இயக்கப்படும் சைக்கிள் ஆகும். மின்சார சக்தியுடன் கூடிய கார் ஆகவும் பயன்படுத்த முடியும். கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த நிபுணர் ஸ்டீவர்ட் (65) இதை தயாரித்துள்ளார். இதன் மூலம் கனடாவில் இருந்து கீவெஸ்ட் வரை 1200 மைல் தூரம் பயணம் செய்கிறார். இந்த புதிய வாகனத்தில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும்.
உம்ராவுக்கு சென்றார் பாகிஸ்தான் பிரதமர்!
ஆக 2
This gallery contains 1 photo.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் சவுதி அரேபியாவில் ‘உம்ரா’ செய்வதற்காக இன்று தலைநகர் ஜெட்டா வந்தடைந்தார். ஜெட்டா விமான நிலையத்தில் அவரை மக்கா பிராந்திய கவர்னரும் சவுதி இளவரசருமான கலீத் அல் ஃபைசல் வரவேற்றார். இதற்காக சவுதி அரேபியா வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அந்நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகங்களை பாதுகாப்பு கருதி ஞாயிறன்று மூட அரசு முடிவு!
ஆக 2
தூதரக ஊழியர்கள் மற்றும் அங்கு வருகை தருவோரின் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்கத் தூதரகங்கள் வரும் ஞாயிறன்று மூடப்படும் என்ற அமெரிக்க அரசு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. தகவல் அதிகாரியான மேரி ஹார்ப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். ஆயினும், அச்சுறுத்தல்கள் குறித்த விவரத்தினையும், எந்தெந்த நாட்டு அலுவலகங்கள் மூடப்படும் என்ற விவரத்தையும் அவர் குறிப்பிடவில்லை. குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் தூதரகங்கள் மூடப்படும் என்ற மேரி இதுகுறித்த மதிப்பீடுகளுக்குப் பின் தொடர்ந்து […]
சிரியாவில் ஆயுதக்கிடங்கு வெடித்தது – 40 பேர் மரணம், 120 பேர் காயம்!
ஆக 2
This gallery contains 1 photo.
சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஆயுதக் கிடங்கிலும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பிரட்டனைச் சேர்ந்த சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மத்திய சிரியாவின் நகரமான ஹாம்ஸ் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறின. இதில் ஆயுதக் கிடங்கின் கட்டடம் தரைமட்டமானது. ஆயுதக் கிடங்கின் அருகில் இருந்த பல வீடுகள் இடிந்தன. […]
ஈரானை மேலும் துரத்துகிறது அமெரிக்கா!
ஆக 2
This gallery contains 1 photo.
அணு உலை பிரச்னை தொடர்பாக ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில், அமெரிக்கா இனி ஈரானுக்கு சுரங்கம், கட்டுமானம் துறைகளில் ஒத்துழைப்பு அளிக்காததுடன், 2015ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக அளவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஈரானுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.