29 மே 2015, இன்று தெவடகஹ ஜும்மா மஸ்ஜிதில் ஒன்று கூட
ஐக்கிய சமாதான முன்னனி அழைப்பு.
பர்மாவில் வாழும் முஸ்லீம்களுக்காக அமைதியான எதிர்ப்பும் கொழும்பில் உள்ள பர்மா நாட்டின் தூதுவரிடமும் பர்மாவில் அப்பாவி முஸ்லீம்களை காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்வதை நிறுத்துமாறும் எமது கண்டன அறிக்கையையும் சமர்ப்பிக்க உள்ளோம்.
இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்குப் பின் கொழும்பு 7 தெவட்டஹா பள்ளிவாசல் முன்பாக அமைதியான கண்டனம் தெரிவிப்பததுடன் அறிக்கையையும் கொழும்பில் உள்ள பர்மா (மியண்மார்) தூதுவரிடமும் சமர்ப்பிக்க உள்ளோம. என கதிஜா பவுண்டேசனின் தலைவர் MSH முஹம்மத் தெரிவித்தார்.
பர்மாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள், வயதாணவர்கள் பெண்கள் என ஈன இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.
அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுகினற்ன.
அந் நாட்டில் வாழும் சிறுபாண்மை அப்பாவி முஸ்லீம்களை திட்டமிட்டு கொலை செய்வதுடன் இனச்சுத்திகரிப்பையும் மேற்கொண்டுவரும் அந்த நாட்டு அரசாங்கத்தின் கடும் போக்கு மற்றும் பௌத்த மதத் தலைவர்களினதும் சிநதனையானது இந் உலகில் மிகவும் வெறுக்கத்தக்கச் செயலாகும்.
இதனையிட்டு ஜ.நா. மணித உரிமை மற்றும் உலகநாடுகள் தலையிட்டு இதனைநிறுத்த வேண்டும் இதற்காக இலங்கை அரசாங்கமும் குரல் கொடுக்க வேண்டும் என MSH முஹம்மத் தெரிவித்தார்.
இம் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்து அமைதியாக எவ்வித அசம்பாவிதங்களும் மின்றி இந்த சமாதான ஊர்வளத்தில் கலந்து கொண்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போமாக என MSH முஹம்மத் தெரிவித்துள்ளார்.
Ya allah… save the muslim ummah from the ugly barbaric animals in Miyanmar/Kashmir/Palestine!