பேருவளையில் வெள்ளம்!

image

நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக பேருவளை நகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளது.

பேருவளை பள்ளி வீதி, வத்திமராஜபுர, கொரகாதுவ, மருதானை, சீனன்கோட்டை என பல பிரசதசங்களின் வீதிகளும், குடியிருப்புக்களும் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.

இதன் காரணமாக பிரதேசத்தில் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்துள்ளது. மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பலத்த அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

சமைத்த உணவுகள் உடனடியாக தேவைப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கோரியுள்ளனர். மேலும் மழை தொடர்ந்து பெய்துவருவதால் வெள்ள நீர் மட்டம் மேலும் உயரக்கூடுமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

image

image

image

image

Posted on 09/05/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

பின்னூட்டமொன்றை இடுக