மே தினம் அரசியல்வாதிகளின் தினமாக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதாகவும், தொழிலாளர்கள் தனித் தனியாக மே தினங்களை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.
பௌத்த பிக்குகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகளை பாதுகாக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிர்காலமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னூட்டமொன்றை இடுக
Comments 0